சிலரை சிறையில் அடைப்பதில் எந்த ஆர்வமும் இல்லை, திருடப்பட்ட பணத்தை மீட்க விரும்புகிறேன்: பிரதமர்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அது சில நபர்களைச் சிறையில் அடைப்பது பற்றியது அல்ல, மாறாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியை மீட்பது பற்றியது என்றார்.

“இதில் பாடம் என்ன? அதிகாரத்தின் அர்த்தம் என்ன? நான் யாரையும் சிறையில் அடைப்பதில் ஆர்வமில்லை. எனக்கு மக்களுக்குத் திருப்பிக்கொடுக்க அந்தப் பணத்தை மீட்டெடுப்பதில்தான் விருப்பம் உள்ளது.”

“அதுதான் என்னுடைய கவனம். மேலும் இந்தக் கலாச்சாரத்திற்கு (அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்) முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.”

“எனக்கு அது நன்றாகத் தெரியும். அவர்கள் முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் சிறிய பிரச்சினைகளைத் தேடுகிறார்கள்”.

“ஆனால் என்னை நம்புங்கள், பொது நிதி மேலாண்மை போன்ற அடிப்படை பிரச்சினைகளை நாம் தீர்த்தால் மட்டுமே இந்த நாடு பாதுகாப்பாக இருக்கும். அப்போதுதான் கூடுதல் ஒதுக்கீடுகள்பற்றிப் பேச முடியும்,” என்று அவர் இன்று கூறியதாகப் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பத்திரிகையாளர் தின கொண்டாட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தி உரையாற்றும்போது அன்வார் இவ்வாறு கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில், பிரதமர் துறை (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா, துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தவறுச் செய்தவர்களை மறத்தல்

பல அரசியல் மற்றும் பெருநிறுவன பிரமுகர்களால் பல பில்லியன் டாலர்கள் மோசடி செய்ய நாடு “அனுமதித்தது”, ஆனால் அது மறக்கப்பட்டது என்பதும் தனக்கு விசித்திரமாக இருப்பதாக அன்வார் கூறினார்.

இருப்பினும், ஊழல் தலைவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவேன் என்று தம்பூன் எம்.பி. உறுதிப்படுத்தினார், இருப்பினும் அது சில தரப்பினரிடையே பிரபலமாக இல்லாவிட்டாலும் கூட.

“ஊழல் தலைவர்கள், கடந்த கால அல்லது நிகழ்காலத் தலைவர்கள், வணிகர்கள், பெருநிறுவனத் தலைவர்கள் ஆகியோர் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை வீணாக்கியவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்தபோது, ​​நாம் கொண்டிருக்க வேண்டிய கோபமும் ஆதரவும் நான் கண்டதில்லை.”

“ஆனால் அது ஒரு பொருட்டல்ல. எனக்குப் பொதுவான ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் நான் என் வேலையைச் செய்கிறேன்”.

“அது எனது கடமை, இந்த நாட்டில் பரவலாகிவிட்ட ஊழலை ஒழிப்பதை உறுதி செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்,” என்று அவர் மேலும் கூறினார்.